கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் திருமலைக்கோடி சௌபர்ணிகா நதிக்கரையில் குடசாத்ரி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு அன்னை ஸ்ரீ மூகாம்பிகை திருக்கோவில். 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த இத்திருக்கோவில் ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்டு ஸ்வயம்பு லிங்கத்தின் மேல் ஸ்ரீ மூகாம்பிகை அம்மனின் பஞ்சலோக திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டது.
மகாசரஸ்வதி, மகாலக்ஷ்மி, மகாகாளி ஆகிய முப்பெரும் தேவிகளின் அம்சமாக விளங்கும் மூகாம்பிகை அம்மன் ஞானம், கலை மற்றும் கல்வியின் அதிபதியாக திகழ்கிறார்.